Also Watch
Read this
By: Fyrose Banu

காரமடை அரங்கநாதர் சுவாமி கோயில் மாசி மகத் தேர் திருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. கொங்கு மண்டலத்தில் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலங்களில் ஒன்றான காரமடை அரங்கநாதர் சுவாமி கோயில் மாசி மாத தேர் திருவிழா கடந்த 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

மாசி மாத தேர் திருவிழா
இந்த நிலையில் தினந்தோறும் அன்ன வாகனம், சிம்ம வாகனம் அனுமந்த வாகனம் கருட வாகனம் ஆகிய வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் பெட்டத்தம்மன் மலையில் இருந்து அம்மன் அழைத்து வரும் நிகழ்வு நடைபெற்றது.
இன்று காலை 6:30 மணி அளவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாத பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் சுமார் 1,500க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீதேவி பூதேவி சமேத அரங்கநாத பெருமாள் நான்கு ரத வீதியில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பளித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved