Also Watch
Read this
By: Fyrose Banu
இந்தியாவில் இருந்து புறப்படும் முக்கிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், மும்பை, பெங்களூரு விமான நிலையங்களில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
விமானங்கள் தற்காலிகமாக ரத்து
இதனால், இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து இப்பகுதிக்கான விமானங்களை நிறுத்தி வைத்துள்ளன. குறிப்பாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், சவுதி அரேபியாவின் சில பகுதிகள், ஈராக் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கான விமானங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved