Also Watch
Read this
By: Web Team

Accident: சாலையோரம் தலைக்குப்புற கவிழ்ந்த வாகனத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லையில் இருந்து சேரன்மகாதேவி வழியாக தென்காசிக்கு சென்றா தனியார் கூரியர் நிறுவனத்தின் மினி லாரியை முத்து என்பவர் ஓட்டி சென்று கொண்டிருந்தார். வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அனுப்பப்பட்ட கூரியர் பார்சல்களை டெலிவரி செய்வதற்காக அந்த வாகனம் தென்காசிக்கு சென்று கொண்டிருந்தது..
இந்நிலையில் வீரவநல்லூர் அருகே சென்ற கூரியர் வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக வாகனத்தை ஓட்டி சென்றவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சாலையோரம் கவிழ்ந்து கிடந்த வாகனத்தை ராட்சத கிரைன் உதவியுடன் மீட்டனர்.
இதுதொடர்பாக சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பு: வாகனம் ஓட்டும்போது கவனம் தேவை
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved