Also Watch
Read this
By: Web Team

ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த விழாவில் அக்னி குண்டத்தில் தீமிதித்த பக்தர்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த நவாபாளையம் பகுதியில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த ஆலயமான அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் சமேத தர்மராஜா கோவிலில் அக்னி வசந்த விழா கடந்த 18 நாட்களுக்கு முன்பு கொடி ஏற்றத்துடன் தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்றது வந்தது.
விழாவின் ஒரு பகுதியாக பாரத சொற்பொழிவு மற்றும் இரவு நேரங்களில் மகாபாரத கதையில் வரும் தெருக்கூத்து நாடகங்கள் நடைபெற்று வந்தன. இரவு நேரங்களில் சாமி வீதி உலா வருவதுடன், திரௌபதி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்று வந்தன.
இதனை தொடர்ந்து அக்னி வசந்த விழாவின் முக்கிய நிகழ்வில் 18ம் நாளை முன்னிட்டு காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாலையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved