Also Watch
Read this
By: Manigandan Raja

சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் 46 ஆவது ஆட்சியராக நிஷாந்த் கிருஷ்ணா இ.ஆ.ப கையெழுத்திட்டு பொறுப்பேற்றார். அன்மையில் தமிழக அரசு பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்துவந்த மாவட்ட ஆட்சியர்களை பணியிடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தது.
இதில் சிவகங்கை மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்துவந்த பொற்கொடி இ.ஆ.ப அவர்கள் சமூக நலத்துறை கூடுதல் இயக்குநராகவும் நாகர்கோவிலில் மாநகராட்சி ஆனையாளராக பணிபுரிந்து வந்த
நிஷாந்த் கிருஷ்ணா சிவகங்கை ஆட்சியராக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டிருந்தது. இதனை அடுத்து இன்று சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் நிஷாந்த் கிருஷ்ணா இ.ஆ.ப அவர்கள் மாவட்டத்தின் 46 ஆவது ஆட்சியராக கோப்புகளில் கையெழுத்திட்டு பொருப்பேற்றுக்கொண்டார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்திக்கையில் பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் நலத்திட்டங்களில் அதிக கவனம் செலுத்தப்படும் என்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது முக்கியம் என்றும் அதேபோல் மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பேட்டியளித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved