Also Watch
Read this
By: Manigandan Raja

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணியிடம் முத்தம் கேட்டு தொல்லை :
கொல்கத்தாவில் சாலையில் நடந்து சென்ற ஆஸ்திரேலியாவை சேர்ந்த சுற்றுலா பயணியிடம் சிறுவன் முத்தம் கேட்டு தொந்தரவு செய்ததன் பகீர் காட்சி வெளியாகியுள்ளது.
'Marco Roams' என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், ரிக்ஷாவின் மீது அமர்ந்திருந்த சிறுவன் பாலியல் ரீதியாக தன்னை தொந்தரவு செய்ததாக பதிவிட்ட நிலையில், இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு :

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 21 பைசா சரிந்து 94 ரூபாய் 71 பைசாவாக உள்ளது. கடந்த புதன்கிழமை அந்நியச் செலாவணி சந்தையில் டாலருக்கு நிகரான மதிப்பு 94.50 ரூபாய் என்ற அளவில் இருந்தது. இந்நிலையில் இன்றைய வர்த்தகத்தில் 21 பைசா சரிந்து 94.71 ரூபாயாக நிலைப்பெற்றது.
அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தை காரணமாக கடந்த நான்கு நாட்களில் இந்திய ரூபாயின் மதிப்பு 150 காசு வரை உயர்ந்த நிலையில் இன்று சரிவை சந்தித்துள்ளது.
அமெரிக்காவின் அராஜகப் போக்கிற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் :

உலக நாடுகளுக்கு விஸ்வகுரு என்று சொல்லிக்கொள்ளும் பிரதமர் மோடி, 3 இந்தியர்களை கொன்றுவிட்டு மன்னிப்பு கேட்காமல் மிரட்டல் விடும் அமெரிக்காவிடம், ஒரு ஊழியர் போல மெளனம் காப்பது ஏன் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
ஓமன் வளைகுடா பகுதியில் அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் கொடூரமாக கொல்லப்பட்ட விவகாரம், இந்திய அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் திமிர்பிடித்த போக்கையும், மோடியின் மெளனத்தையும் காங்கிரஸ் கடுமையாக சாடி வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved