Also Watch
Read this
By: Web Team

சென்னை சைதாப்பேட்டை மாதிரி பள்ளி மைதானத்தை நெடுஞ்சாலைத்துறை பணிகளுக்காக பயன்படுத்துவதை கண்டித்து, சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே இந்திய மாணவர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரையிலான அண்ணாசாலையில் உயர்மட்டச் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நெடுஞ்சாலைத்துறை, சைதாப்பேட்டை அரசு மாதிரிப்பள்ளி வளாகத்தை பொருட்கள் வைத்திருக்கும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பள்ளி மாணவ- மாணவிகள் கண்டன முழுக்கமிட்டனர்.