Also Watch
Read this
By: Web Team

குமரி மாவட்டம் களியக்காவிளை அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை சுற்றி தடுப்பு வேலி கட்ட முயன்ற மூதாட்டியை, பொது மக்கள் தடுத்து நிறுத்தினர். மீனச்சல் பகுதியில் இருந்த படிப்பக கட்டடத்தில், பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று கடந்த ஓராண்டாக துணை ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வரும் நிலையில், அதே பகுதியை சேர்ந்த 61 வயது மூதாட்டி கீதா குமாரி கட்டடம் இருக்கும் நிலம் மற்றும் முன் பகுதியில் உள்ள சாலை தனக்கு சொந்தம் என கூறி, பணியாட்கள் மூலம் வேலி அமைக்க முயன்றார்.
இதையும் படியுங்கள் : ஸ்ரீராமலிங்க செளடாம்பிகை அம்மன் கோவில் கத்தி போடும் விழா கத்தியால் கீறி ரத்தம் சொட்டச் சொட்ட அம்மனுக்கு நேர்த்திக்கடன்