Also Watch
Read this
By: Manigandan Raja

சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த ஊழியர் :
மும்பையில் மழை வெள்ள பாதிப்பு குறித்து மேயர் ஆய்வு செய்துக் கொண்டிருந்த போது, சாலைப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் ஊழியர் ஒருவர் விழுந்த பகீர் வீடியோ வெளியாகியுள்ளது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றிய நிலையில், நடந்ததை கண்டு டென்ஷனான மேயர், ஒப்பந்ததாரரை நேரில் அழைத்து கடுமையாக எச்சரித்தார்.
அருணாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் கனமழை :

அருணாச்சல பிரதேசத்தில் பெய்த தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக யாசாலி பகுதியில் உள்ள நீப்கோ நீர்மின் திட்ட குடியிருப்புப் பகுதிக்கு அருகே குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததில் 15 க்கும் மேற்பட்ட வீடுகள் அடித்து செல்லப்பட்டன. அதேபோல் பாலம் ஒன்றும் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
ஓடும் ரயிலில் 22 வயது இளைஞர் குத்திக் கொலை :

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஓடும் ரயிலில் 22 வயது இளைஞரை ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது. செவ்வாய்கிழமை இரவு மும்பையில் கனமழை பெய்த நிலையில், ரயில் பெட்டிக்குள் மழை நீர் புகுந்ததால் கதவை மூடுவதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இறுதியில் வாய்த்தகராறு முற்றி அது கொலையில் முடிந்தது.