Also Watch
Read this
By: Manigandan Raja

எம்.எல்.ஏ. பெயரைப் பயன்படுத்தி மோசடி என புகார் :
வடசென்னை காசிமேடு பழைய ஏலக்கூடம் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மீன் மற்றும் கருவாட்டு கடைகள் அமைந்துள்ளது இந்தக் கடைகளுக்கு தற்போது 30 ரூபாய் 50 ரூபாய் என்று வசூலிப்பதாக வந்திருக்கக்கூடிய மீன் வியாபாரம் செய்யும் பெண்கள் மற்றும் திருநங்கைகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறும் பொழுது 16 மீனவர் கிராமங்கள் சேர்ந்து இங்கு ஒரு மீனவர் சங்கம் இருப்பதாகவும் அந்த சங்கத்தினர் மூலம் திங்கள் செவ்வாய் வியாழன் வெள்ளி போன்ற நாட்களில் கடைகளுக்கு30 ரூபாய் மீதமும் புதன் சனி ஞாயிறு ஆகிய நாட்களில் 50 ரூபாய் வசூலித்து வந்ததாகவும்.
ஆனால் சமீபத்தில் சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு இந்த சங்கத்திற்கான தேர்தலோ அல்லது நிர்வாகிகளோ முறையாக நியமிக்கப்படாத நிலையில் இன்று காலை தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்தவர் கூறித்தான் சிலர் வந்து வசூலித்துசென்றதாகவும்.
அதிலும் ஒரு சிலர் இந்த மார்க்கெட்ஆர்கேநகர் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள போதிலும் ராயபுரம் எம்எல்ஏ சொல்லி தான் ஆர் கே நகர் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளான
தாங்கள் பணம் வசூலிப்பதாகவும் கூறிச் சென்றதாக புகாரை முன்வைக்கின்றனர் வாங்கிச் செல்லும் பணத்திற்கு தங்களுக்கு எந்த வித அடிப்படை வசதியும் செய்து தருவதில்லை.
என்றும் பாரதத்திற்கு ஒரு நாள் மட்டுமே வந்து சுத்தம் செய்வதாகவும் இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது என்றும் கூறுகின்றனர் முறையாக தேர்தல் நடத்தி சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுத்த பிறகு தான் இனி நாங்கள் பணம் செலுத்துவோம் என்றும் கூறியுள்ளனர்.
ஆர் கே நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரிய வில்சன் நிதி அமைச்சராக பதவி ஏற்றுள்ள நிலையில் அவரது தொகுதியில் இருந்து நிர்வாகிகள் நிதி வசூலிப்பில் ஈடுபட்டது தற்போது பேசு பொருளாகியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved