news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குடிநீர் வராததை கண்டித்து சாலை மறியல்
tv

Also Watch

tv

Read this

குடிநீர் வராததை கண்டித்து சாலை மறியல்

செட்டிமேடு, சென்னை

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
செட்டிமேடு

சென்னை  மாநகராட்சி மணலி மண்டலம் 17 வது வார்டுக்கு உட்பட்ட செட்டிமேடு பகுதியில் சுமார் ஒரு மாதம் காலமாக குடிநீர் வராததால் ஆத்திரமடைந்த பகுதி மக்கள் காலி குடங்களை வரிசையாக வைத்து சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மெட்ரோ வாட்டர் அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பொதுமக்கள் தெரிவிக்கையில் தங்கள் பகுதியில் சுமார் ஒரு மாத காலமாக சரியான குடிநீர் வராமல் அவதிக்குள்ளாகி வருவதாகவும் இதைக் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் எப்போதாவது ஒருமுறை வரும் தண்ணீரில் புழு பூச்சிகள் கலந்து வருவதால் அதனை பயன்படுத்துவதால்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி இருமல் தலைவலி காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்லக்கூடிய சூழல் இருப்பதாகவும் இதனால் தங்கள் பகுதி முழுவதும் உள்ள பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருவதாகவும் தொடர்ந்து இதே நிலை நீடித்தால் பெரும் அளவில் போராட்டத்தை நடத்தப் போவதாக தெரிவித்தனர்

சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த சாலை மறியலால் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Link
தனியார் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

தனியார் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போதை காளான் பயன்படுத்தியதாக நால்வர் கைது

2
40 mins agoshare
போதை காளான்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau