Also Watch
Read this
By: Manigandan Raja

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக கிருஷ்ணகிரி இருந்து சேலம் நோக்கி சென்ற தனியார் பேருந்து 70 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது, காரிமங்கலம் அருகே பொன்னேரி நெடுஞ்சாலையில் முன்னால் சென்றுகொண்டிருந்த வாகனத்தை இடதுபுறமாக முந்தும் போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து டிரைவர் திடிர் என பிரேக் போட்டதால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் பக்கவாட்டில் தலைகீழாக கவிழ்ந்து விபத்திற்க்குள்ளானது.

இதில் 20க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு லேசான காரியமும் நான்கு பயணிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த காரிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்க்கு சென்று போக்குவரத்தை சீர்
செய்து, காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.