news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குடியிருப்பு பகுதியில் உள்ள குட்டையில் தேங்கிய கழிவுநீர்
tv

Also Watch

tv

Read this

குடியிருப்பு பகுதியில் உள்ள குட்டையில் தேங்கிய கழிவுநீர்

சிவகாசி, விருதுநகர்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
விருதுநகர்

சிவகாசி மாநகராட்சி 8வது வார்டுக்குட்பட்ட முனியசாமி நகர் பகுதியில் மாநகராட்சியிலிருந்து வெளியேறும் கழிவு முழுவதும் குட்டையில் தேங்கி நிரம்பியுள்ளது.

இதனால் முனியசாமி நகர் 1வது மற்றும் 2வது தெரு, நெல்லுகுத்திப்பாறை உள்ளிட்ட பகுதியில் கொசு தொல்லை உள்ளிட்ட சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளதால் குட்டையில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற கோரி பல முறை மாநகராட்சி அலுவலகத்தில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால்.

மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் திருத்தங்கல் - செங்கமலநாச்சியார்புரம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் 8வது வார்டு திமுக மாமன்ற துரைப்பாண்டியும் பொதுமக்களுக்கு ஆதரவாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் குட்டையில் தேங்கிய கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுத்ததால் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Related Link
டாஸ்மாக்கில் அதிக விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை

டாஸ்மாக்கில் அதிக விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடுரோட்டில் பற்றி எரிந்த பள்ளி வாகனம்

1
8 mins agoshare
School van fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau