Also Watch
Read this
By: Manigandan Raja

சென்னை, பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலையில் அமைந்துள்ள புதிய தனியார் சலூன் மற்றும் அழகியல் மையத்தினை நடிகர் விமல் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தோடு, குத்து விளக்கு ஏற்றி தொழிலை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பின்னணி பாடகர் திவாகர், பிரதாப் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் பிரதாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டு புதிய நிறுவனத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர். திறப்பு விழாவில் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக
பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விமல், "மீண்டும் வெப் சீரிஸில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக நடிப்பேன்" என்று தெரிவித்தார். அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த அவர், "தமிழகத்தில் தற்போது
சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது" என்றார்.

மேலும், நடிகரும் அரசியல் கட்சித் தலைவருமான விஜய் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "கில்லி திரைப்படத்தில் விஜய்யுடன் நடித்தபோதே அவர் எல்லாம் விஷயத்தையும் கூர்மையாகவும் நிதானமாகவும் கவனிப்பவர் என்பதை நான் பார்த்திருக்கிறேன்.
மக்களின் பிரச்சினைகளையும் அதே அக்கறையுடன் கவனிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது" என்று கூறினார். நடிகர் விமலின் இந்தக் கருத்துகள் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடையே கவனம் பெற்றன., அதே நேரத்தில் அரசியல் கேள்வி கேட்க வேண்டாம் என்று சொன்னேன் ஆனால் கேட்கிறீர்கள் என சிரிச்சுக்கிட்டே பதில் சொன்னார்.