Also Watch
Read this
By: Web Team

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையோரம் இருந்த ஊர் அறிவிப்பு பலகை மற்றும் கடைகளை இடித்துக் கொண்டு சென்று சுவரில் மோதி நின்றது. குஜிலியம்பாறை பகுதியில் இருந்து சிமெண்ட் ஏற்றிக் கொண்டு வந்த லாரி ஆர்.எஸ்.வையம்பட்டி பகுதியில் சாலை வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.
வீட்டு சுவரின் மீது மோதி லாரி நின்றுவிட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்ட நிலையில், கடைகளின் மேற்கூரைகள் சேதமடைந்தன. அதிவேகம் காரணமாக ஏற்பட்ட விபத்து தொடர்பாக வையம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.