Also Watch
Read this
By: Manigandan Raja

புழல் ஊராட்சி ஒன்றியம் புள்ளிலைன் ஊராட்சிக்கு உட்பட்ட பாலவாயல் நெடுஞ்சாலையில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூபாய் 13.30 லட்சம் செலவில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டு கடந்த ஆட்சியில் தேர்தலுக்கு முன்னர் அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
ஆனால் இந்த புதிய கட்டிடம் திறப்பு விழா கண்ட அன்றே ஒரே நாளில் மூடப்பட்டு இன்று வரை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. மேலும் புள்ளிலைன் ஊராட்சி புதுநகரில் இயங்கி வரும் வாடகை கட்டிடத்தில் உள்ள ரேஷன் கடையை மாற்றுவதற்காக இங்கு இடம் ஒதுக்கப்பட்டு கட்டிடம் கட்டப்பட்டது.
ஆனால் ரேஷன் கடை இதுவரை மாறுதலாகாமல் உள்ளதால் அரசு பணம் வீணாவதுடன் குடிமகன்களின் கூடாரமாக மாறி உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved