Also Watch
Read this
By: Web Team

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு வருவதால், பள்ளி, கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம், குடவாசல், வலங்கைமான், நீடாமங்கலம், முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் நாள் ஒன்றுக்கு 2 முதல் 3 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
காலை நேரத்திலும் மின்வெட்டு ஏற்படுவதால் பள்ளி, கல்லூரி மாணவர்களும், வேலைக்கு செல்வோரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved