Also Watch
Read this
By: Web Team

திருவள்ளுர் மாவட்டம் திருத்தணி முருகன் மலைக் கோவிலில் விரிவுபடுத்தப்பட்டு வரும் பார்க்கிங்கில் தடுப்பு சுவர் இல்லததால் மண் சரிவு ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
சுமார் 40 அடி கொண்ட பள்ளத்தில் லாரிகள் மூலம் கிராவல் மண் கொட்டி நிரப்பும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அந்தப் பகுதியில் பக்தர்களின் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில் எந்த ஒரு தடுப்பு சுவரும் இல்லாததால், சிறு மழை பெய்தால் கூட மண் அரிப்பு ஏற்ப்பட்டு வாகனங்கள் பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளதாக பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.