Also Watch
Read this
By: Manigandan Raja

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த புதூர் நாடு சித்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஊரான் காளி மகன்கள் ராமன் மற்றும் பெருமாள் இரு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் ராமன் தனது நான்கரை சென்ட் அளவிலான போலி ஆவணம் தயார் செய்து ஏமாற்றிவிட்டதாக எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அப்போது அந்தப் புகாரில் ராமனாகிய எனக்கு நான்கரை செண்ட் அளவிலான இடம் இருந்தது இதனை எனது அண்ணன் மகனான காளி என்பவர் தாத்தா பெயரான ஊரன் காளி என்பதும் அண்ணன் மகனான காளி என்பதும் இருவரும் ஒருவரே என கிராம நிர்வாக அலுவலர் போலிச் சான்றிதழ் தயார் செய்து.
நான்கரை செண்ட் அளவிலான இடம் தனக்கு சொந்தம் எனக் கூறி திருப்பத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் செட்டில்மென்ட் பத்திரம் தயார் செய்து மோசடி வேலையில் ஈடுபட்டு தனது வீட்டை அபகரித்து விட்டார் எனவே அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்து வீட்டை மீட்டு தர வேண்டும் எனக் கூறி அந்த மனவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.