Also Watch
Read this
By: Manigandan Raja

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் பகுதியில், 6 காட்டு யானைகள் திடீரென ஊருக்குள் புகுந்துள்ளது. அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்து, ராகி ,கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட விவசாய பயிர்களை நாசம் செய்து வருகிறது.
அப்பகுதி கிராம மக்கள் பென்னாகரம் வனத்துறையினருக்கு அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டும்
பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நடமாட்டத்தின் காரணமாக, இந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.