Also Watch
Read this
By: Manigandan Raja

ஹெலிகாப்டர்கள், விமானங்கள் மூலம் வினாத்தாள் பட்டுவாடா :
நீட் இளநிலை வினாத்தாள் கசிவை தடுக்கும் நோக்கில், இந்திய விமானப்படை நாடு முழுவதும் உள்ள 18 மண்டலங்களுக்கு வினாத்தாள்களை பத்திரமாக கொண்டு சேர்த்துள்ளது. இதற்காக விமானப்படையின் அதிநவீன ஹெலிகாப்டர்கள் மற்றும் போக்குவரத்து விமானங்கள் மூலம் 200-க்கும் மேற்பட்ட முறை பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி குடிசை வாசிகளின் மறுவாழ்வு குறித்து ஆலோசனை :

டெல்லி குடிசைப் பகுதி மக்களின் மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு தொடர்பான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது. அப்போது, டெல்லி குடிசை வாசிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களுக்கு நிரந்தர வீடுகளை அமைத்துக் கொடுப்பது பற்றி விவாதிக்கப்பட்டது
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved