Also Watch
Read this
By: Manigandan Raja

டிரோன் தாக்குதல் :
வடக்கு ஆப்பிரிக்கா நாடான சூடானில் துணை ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 2021ஆம் ஆண்டு முதல் சூடானில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது.
துணை ராணுவத்தின் படைப்பிரிவுகளில் ஒன்றான அதிவிரைவு ஆதரவு படையினரை ராணுவத்துடன் இணைக்க ராணுவ தளபதி ஜெனரல் படக் அல்-பர்ஹன் முயற்சி மேற்கொண்டார். இதன் காரணமாக ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் அவ்வப்போது மோதல் போக்கு நீடித்து வருகிறது.
இந்நிலையில், ரஹாட் பகுதியில் 8 குழந்தைகள் உட்பட 24 பேருடன் பயணித்த வாகனத்தின் மீது துணை ராணுவத்தினர் டிரோன் தாக்குதல் நடத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved