Also Watch
Read this
By: Manigandan Raja

மத்திய அரசின் உத்தரவு :
வந்தே மாதரம் தொடா்பான மத்திய அரசின் உத்தரவு, அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது, மத சுதந்திரத்துக்கு எதிரானது என்று அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் எதிா்ப்புத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலாளா் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்க மொழியில் எழுதப்பட்டுள்ள வந்தே மாதரம் பாடலில் துா்கா மற்றும் பிற கடவுள்களை வழிபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் அல்லா ஒருவரையே வழிபடுவா் என்பதால் அந்த அறிவிக்கையை மத்திய அரசு திரும்பப் பெறும்படி கேட்டுக் கொள்வதாக குறிப்படப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved