Also Watch
Read this
By: Web Team

பீகாரில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், பாஜக, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்பட தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில், அக்டோபர் 28-ஆம் தேதி கொண்டாடப்படும் ‘சத்’ பூஜைக்கு பிறகு காலதாமதமின்றி தேர்தலை நடத்த கோரிக்கை வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், முடிந்தவரை ஒரே கட்டமாகவோ அல்லது 2 கட்டங்களாகவோ வாக்குப்பதிவை நடத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved