Also Watch
Read this
By: Manigandan Raja

இன்று முதல் 5 நாட்களுக்கு வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் :
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று முதல் 5 நாட்களுக்கு வளைகுடா மற்றும் ஐரோப்பியா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது, அவர் அந்தந்த நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களையும், உயர்மட்டத் தலைவர்களையும் நேரில் சந்தித்துப் பேசவுள்ளார்.
பல்வேறு நாடுகளுடன் FTA ஒப்பந்தத்தை முன்னெடுக்கும் இந்தியா :

கனடா, மெக்சிகோ, பிரேசில் ஆகிய நாடுகள் உடனான இந்தியாவின் சுதந்திர வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் இந்தாண்டுக்குள் முடியும் என வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இந்தாண்டுக்குள் கையெழுத்தாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கட்சியின் முழுப் பொறுப்பையும் கையில் எடுக்கிறேன் :

திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்க மாநிலத் தலைவர் சந்திரா பட்டாச்சார்யாவும் அதிருப்தி குழுவில் இணைந்ததால், கட்சியின் முழுப் பொறுப்பையும் கையில் எடுப்பதாகவும், அதிருப்தி எம்எல்ஏக்கள் தலைமையகத்தைப் பூட்டியதால், இனி தனது இல்லமே தலைமையகமாகச் செயல்படும் எனவும் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கட்சியின் சின்னம் என்னோடுதான் இருக்கும் என்றும் அவர் ஆவேசமாக தெரிவித்தார்.