Also Watch
Read this
By: Manigandan Raja

நாட்டுக்காக இறுதி வரை போராடி உயிர் நீத்தவருக்கு அஞ்சலி :
ஈரானின் முன்னாள் அரசத் தலைவர் அயதுல்லா கமேனியின் இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். நாட்டுக்காக இறுதி வரை போராடி உயிர் நீத்த உண்மையான தலைவருக்கு கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்தனர். வரும் 9ஆம் தேதி மஷாத்தில் உள்ள புனித தலத்தில் கமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி அஞ்சலி :
அமெரிக்க - மற்றும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வின் இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வ அரசு குழுவுடன், முக்கிய அரசியல் மற்றும் மதத் தலைவர்களும் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
அதன்படி மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா, காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
ஈரானியத் தலைவர்களை கொல்லத் திட்டமா?

ஈரான்- அமெரிக்கா பேச்சுவார்த்தையின்போது 2 முக்கிய பிரதிநிதிகளை கொலை செய்ய இஸ்ரேல் திட்டம் தீட்டுவதாக அமெரிக்க பத்திரிகையில் செய்தி வெளியான நிலையில், இஸ்ரேல் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க பத்திரிக்கை வெளியிட்டது முற்றிலும் பொய்யான செய்தி என இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.