Also Watch
Read this
By: Manigandan Raja

இராணுவ ஆட்சியில் வெடித்த வன்முறை :
மாலியில் அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் ஐந்து இடங்களில் ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அரசாங்கப் படைகள் மற்றும் ரஷ்ய ஆதரவுப் படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ள வடக்குப் பகுதியில் உள்ள அனெஃபிஸ் மற்றும் அகுல்ஹோக் பகுதிகளில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மரணத்தை நோக்கியே மோடி ஆஸ்திரேலியா வருகிறார் :

ஆஸ்திரேலியாவுக்கு செல்ல உள்ள பிரதமர் மோடிக்கு இணையதளத்தில் கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடியின் வருகை தொடர்பாக, இந்திய வம்சாவளியினர் பதிவிட்ட ஃபேஸ்புக் பதிவின் பின்னூட்டத்தில் கமென்ட் செய்துள்ள நபர், நிகழ்ச்சியின்போது மைதானத்தின் மேற்கூரையை மூடி வைப்பது நல்லது என்றும், இல்லையென்றால் அவர் மரணத்தை நோக்கியே ஆஸ்திரேலியா வருகிறார் எனவும் பதிவிட்டுள்ளார்.
வெனிசுலாவை தாக்கிய இரட்டை நிலநடுக்கங்கள் :

வெனிசுலாவை தாக்கிய இரட்டை நிலநடுக்கங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 900-த்தை கடந்தது. மேலும் நிலநடுக்கத்தால் 16,000-க்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவித்து வருவதாகவும், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.