Also Watch
Read this
By: Web Team

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால், கே.ஆர்.எஸ் அணையில் இருந்து எந்த நேரத்திலும் உபரி நீர் திறக்கப்படும் என்பதால், காவிரி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
124.80 அடி உயரம் கொண்ட கே.ஆர்.எஸ் அணையின் நீர்மட்டம் தற்போது 118.60 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 18 ஆயிரத்து 387 கன அடியாக உள்ளது.
அதே போல் 284 அடி உயரம் கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 277 அடியாக உயர்ந்துள்ளது.
கபினி அணையின் நீர்வரத்து விநாடிக்கு 14 ஆயிரத்து 705 கன அடியாக உள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 25 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.