Also Watch
Read this
By: Manigandan Raja

பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் நோட்டீஸ்
நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசிய கருத்துகள் அவையின் உரிமையை மீறியதாகக் கூறி, அவருக்கு எதிராக பாஜக எம்.பி. அனுராக் தாக்கூர் உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளார்.
முட்டாள்கள், குருட்டுத்தனமான பக்தர்கள் போன்ற சொற்களை பயன்படுத்தியது அவை விதிமுறைகளை மீறுவதாகவும், உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் மீதான வன்முறை; உச்சநீதிமன்ற குழு மூலம் விசாரணை
டெல்லி போராட்டத்தில் மாணவர்கள் மீதான வன்முறை குறித்து விசாரிக்க உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ் உயர்நிலை குழு அமைக்க வேண்டும் என்று மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். மாணவர்கள் நீதி பெறத் தகுதியானவர்கள் என்றும், முழு அளவில் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

வினாத்தாள் கசிவைத் தடுக்கும் முக்கிய மசோதா
தேர்வுகளில் வினாத்தாள் கசிவை தடுக்கவும், தேர்வு முறையின் நம்பகத்தன்மையை உறுதி செய்யவும் கொண்டு வரப்பட்ட தேர்வு சீர்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை பிரதமர் மோடி வரவேற்றுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசி வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோவில், வெளிப்படையான, பாதுகாப்பான மற்றும் நம்பகமான தேர்வு முறையை உருவாக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.