Also Watch
Read this
By: Manigandan Raja

ராட்டினம் சரிந்து விபத்து :
ஹரியாணா மாநிலம் பரிதாபாத்தில் நடைபெற்ற கைவினை பொருட்கள் கண்காட்சியில் ராட்டினம் சரிந்து விபத்துக்குள்ளானதில் காவலர் ஒருவர் உயிரிழந்தார்.
மேலும் 13 பேர் படுகாயமடைந்தனர். சூரஜ்கண்ட் மேளா-வின் போது (( Surajkand Mela)) விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. ராட்டினம் சரிந்து விழுந்த சமயத்தில், அதில் இருந்தவர்களை காப்பாற்ற முயன்றபோது காவல் விபத்தில் சிக்கியதாக தெரிகிறது.
விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சூரஜ்கண்ட் போலீசார் தெரிவித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved