Also Watch
Read this
தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.

17ஆவது முதல்வர்
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தமது பதிவில்கூறி இருப்பதாவது;
நடைபெற்று முடிந்த 17ஆவது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு இபிஎஸ் பதிவிட்டுள்ளார்.

தனிப்பெரும் கட்சியாக தவெக
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தவெக 108 இடங்களிலும், திமுக 59 தொகுதிகளிலும், அதிமுக 47 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. எந்த கட்சிக்கும் ஆட்சி அமைப்பதற்கான தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

ஆட்சி அமைக்க தவெக முயற்சி
234 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட தமிழகத்தில் ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தமிழ்நாட்டில் தொங்கு சட்டசபை உருவானது. அதிக இடங்களை பிடித்த தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதற்கான முயற்சியில் இறங்கி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved