Also Watch
Read this
வெனிசுலாவில் நிலநடுக்கம் ஏன் ஏற்பட்டது? கராகஸ் அருகே கடலுக்குள் செல்லும் சான் செபாஸ்டியன் பிளவு, வடகிழக்கு வெனிசுலா முழுவதும் செல்லும் எல் பிலார் பிளவு, மற்றும் வெனிசுலா ஆண்டிஸ் மலைத்தொடர் வழியாகச் செல்லும் போகோனோ பிளவு ஆகியவற்றால் நிலநடுக்கம் ஏற்படுகிறது. இந்த பிளவுகளில் எதுவும் தொடர்ச்சியாக நகர்வதில்லை, மாறாக இவை காலப்போக்கில் அழுத்தத்தை திரட்டி, பின்னர் திடீரென உடைகின்றன.

சோகங்களை சந்தித்த நாடு...
வரலாறு முழுவதும், இந்தப் புவியியல் அமைப்பு, பல பெரிய நிலநடுக்கங்களுக்கு காரணமாக இருந்துள்ளது கடந்த காலங்களிலும் பல பெரிய சோகங்களைச் சந்தித்துள்ளது.

1812 - கராகஸ் நிலநடுக்கம்
வரலாற்று ஆய்வுகளின்படி, 1812ஆம் ஆண்டு வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கமும் ஒரு பயங்கரமான இரட்டை நிலநடுக்க தொடராகவே இருந்தது. இதில், கராகஸ் நகரில் மட்டும் சுமார் 10,000க்கும் மேற்பட்ட பொது மக்கள் உயிரிழந்தனர்.

1900 - சான் நர்சிசோ நிலநடுக்கம்
San Narciso Earthquake வெனிசுலாவின் கடலோரப் பகுதியில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான இந்த நிலநடுக்கமே அந்நாட்டின் வரலாற்றில் பதிவான மிக வலிமையான நிலநடுக்கம். இது, கராகஸ் நகரை உலுக்கி, பெரும் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தியது.

1967 - கராகஸ் நிலநடுக்கம்:
ஜூலை 1967இல் ஏற்பட்ட 6.6 ரிக்டர் நிலநடுக்கத்தில் 300க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
1997ஆம் ஆண்டின் கரியாகோ நிலநடுக்கம்
இது டஜன் கணக்கான மக்களைக் கொன்றதுடன், எல் பிலார் பிளவுப் பகுதியிலிருந்து வெளியான அழுத்தத்தின் காரணமாக, தரை மேற்பரப்பில் கண்ணுக்குத் தெரியும் பிளவுகளையும் ஏற்படுத்தியது.

2018 - சுக்ரே நிலநடுக்கம்
ஆகஸ்ட் 2018ல் 7.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் அது 123 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதால் பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்படவில்லை. இந்த வரலாற்றுப் பக்கங்களை புரட்டிப் பார்க்கும் போது, தற்போதைய 2026 நிலநடுக்கமானது 1900ஆம் ஆண்டிற்குப் பிறகு வெனிசுலாவைத் தாக்கிய மிகக் கொடூரமான பேரிடராக மாறியுள்ளது என்பது தெளிவாகிறது

உதவிக்கரங்கள்...
இயற்கையின் இந்த அதிரடித் தாக்குதலால் வெனிசுலா நிலைகுலைந்து போயிருந்தாலும், மனிதநேயம் அந்த நாட்டை மீட்டெடுக்கத் தொடங்கியுள்ளது.

ஐ.நா. சபை, அமெரிக்கா, பிரேசில், மெக்ஸிகோ, கொலம்பியா உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட நாடுகள் தங்களின் மீட்புக் குழுக்களையும், நூற்றுக்கணக்கான மோப்ப நாய்களையும், டன் கணக்கிலான மருந்துகளையும் வெனிசுலாவுக்கு அனுப்பி உதவி வருகின்றன.

இடிபாடுகளுக்கு இடையே இன்னும் மனித உயிர்கள் தேடப்பட்டு வருகின்றன. இயற்கையின் பேராற்றலுக்கு முன்னால் மனிதன் எவ்வளவு சிறியவன் என்பதை இந்த நிகழ்வு மீண்டும் உணர்த்தி இருந்தாலும், மக்களின் பிரார்த்தனைகளும் உலக நாடுகளின் கரங்களும் வெனிசுலாவை இந்தத் துயரத்திலிருந்து விரைவில் மீட்டெடுக்கும் என்று நம்பிக்கை கொள்வோம்.