கந்திலி ஒன்றியம் இராஜாவூர் பகுதியில் ராஜாவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்கு தலைமை ஆசிரியராக நல் ஆசிரியர் விருது பெற்ற இந்தரா என்பவர் பணியாற்றி வருகிறார். மேலும் இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் ஒவ்வொரு திறமைகளில் தனித்துவமாக விளங்கி வருகின்றனர். தமிழக முதல்வரை வரவேற்ற மழலைகள்இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த தமிழக முதல்வர் ஸ்டாலினை பெருமைப்படுத்தும் விதமாக அந்தப் பள்ளியைச் சேர்ந்த முதல் வகுப்பு மாணவர்களன வர்ணிகா மற்றும் திகழரசன் இரண்டு பிஞ்சு குழந்தைகளும் தங்களது மழலை குரலில் தங்க தளபதி எங்கள் தளபதி என பாடல் பாடி காட்டி அசத்தினர்.தராங்களே, தராங்களே... மேலும் தமிழக முதல்வர் தமிழ்நாட்டிற்கு செய்த சாதனைகளையும் , அவர் கொண்டு வந்த திட்டங்கள் குறித்தும் பாடி அசத்தினர். அதிலும் குறிப்பாக இலவச மடிக்கணினி தராங்களா என சிறுமி கேட்க மற்றொரு சிறுவன் தராங்களே, தராங்களே... என பாடி அசத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. Related Link தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னோடி மாநிலம்