Also Watch
Read this
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், பிரம்மாண்டமாக முதல் மாநாட்டை கூட்டிய WE THE LEADERS அமைப்பின் தலைவர் அண்ணாமலை, 2026ஆம் ஆண்டை போலவே 2031ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என சூளுரைத்தார். தவெக ஆட்சி முடியும்போது தமிழ்நாட்டின் கடன் 15 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்றும் கணித்தார்.

பொள்ளாச்சியில் அண்ணாமலை
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தொடங்கியுள்ள ‘வீ த லீடர்ஸ்’ இயக்கத்தின் முதல் மாநாடு, பொள்ளாச்சியில் நடைபெற்றது. இந்த அமைப்பின் தலைமை வழிகாட்டியான அண்ணாமலை பேசி இருப்பதாவது:

பொள்ளாச்சி மண்ணில் பெரிய எதிர்பார்ப்பு, நம்பிக்கையோடு நின்று கொண்டு உள்ளோம். இது, ஒரு போதை ஒழிப்பு மாநாடு. இங்கு உள்ள ஒரு தன்னார்வலரின் தந்தை, இப்போது தான் உயிரிழந்தார். அவர் மதுப் பழக்கத்திற்கு ஆளானவர். அதையும் தாங்கிக்கொண்டு போதைக்கு எதிராக அந்த தன்னார்வலர் இங்கு நின்று கொண்டு இருக்கிறார், போதைக்கு எதிராக வலுவாக உள்ளோம்.

நானும் தன்னார்வலர் தான்...
இந்த அமைப்பில், 38 நாட்களில் 19 லட்சம் பேர் உறுப்பினராக சேர்ந்து உள்ளனர். தமிழகத்தில் நல்லவர்கள் உள்ளனர், வாய்ப்புக்காக காத்து இருக்கின்றனர். இந்த அமைப்பு, எனது குடும்பத்திற்கு சொந்தமானது அல்ல, உங்களுக்கானது. இந்த அமைப்பை பொறுத்தவரை நானும் ஒரு தன்னார்வலர் தான்.

இந்த அமைப்பின் உறுப்பினர்கள் 50 லட்சத்தை எட்டும் போது நிரந்தரமாக ஒரு நல்ல சமுதாயம் உருவாகும். சுற்றுச்சூழலை பாதுகாக்க 50 லட்சம் மரக்கன்றுகளை நட உள்ளோம். ஆறு மாதம் இலக்கு வைத்து உள்ளோம்.

தவெக அரசுக்கு மரியாதை
2026ஆம் ஆண்டு ஒரு கோடியே 65 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்து ஒரு அரசை தேர்ந்தெடுத்து உள்ளனர். இந்த அரசுக்கு மரியாதை தர வேண்டும்.
தவெக அரசில் உள்ள அமைச்சர்கள் பெரும்பாலானோர் முதல் முறையாக அமைச்சர் ஆனவர்கள், தடுமாற்றம் இருக்கத்தான் செய்யும், தடுமாறும் போது தூக்கி விட வேண்டும், கீழே அழுத்தக்கூடாது. தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற வேண்டும் என்பது இலக்கு. அதை நோக்கித் தான் உழைப்பு இருக்கும்.

நாம் ஆட்சிக்கு வரும் போது...
‘வீ த லீடர்ஸ்’ அரசியல் கட்சியாக மாறப் போகிறது, கிராமம் தோறும் சென்று மக்களை சந்திக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தனி நபர் மீதும் 4 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளது.

தவெக அரசு இந்த ஆண்டு 85 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கும், அடுத்த ஆண்டும் அதேபோல் கடன் வாங்கும். நாம் ஆட்சிக்கு வரும் போது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை தரப்படும்.

உண்மையான சமூக நீதி, நிலையான வளர்ச்சி, விவசாயத்தில் எழுச்சி, பண்பாட்டு மீட்சி, அரசியல் புரட்சி ஆகியன நமது இலக்காக இருக்கும்.தமிழகத்தில் 2031ஆம் ஆண்டு ஆட்சியை பிடிப்போம்.
இவ்வாறு அண்ணாமலை பேசி உள்ளார்.