Also Watch
Read this
இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட்டான விக்ரம்-1 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. முதலில் 11:30 மணிக்கு ஏவத் திட்டமிட்ட நிலையில் தொழில் நுட்ப குறைபாட்டால் 12.05 மணிக்கு விண்ணேறி பாய்ந்தது. விக்ரம் 1 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதை அடுத்து விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். ஸ்கைரூட் குழுவினருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து, பிரதமர் உற்சாகமூட்டினார்.

புதிய மைல் கல்லாக...
இந்திய விண்வெளி வரலாற்றில், புதிய மைல்கல்லாக, உள்நாட்டு தனியார் நிறுவனத்தால் முழுமையாக வடிவமைக்கப்பட்ட முதல் ஆர்பிட்டல் வகை ராக்கெட்டான ‘விக்ரம்-1’ இன்று ஜூலை 18ஆம் தேதி, விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து, வரலாற்று சிறப்புமிக்க இந்த முயற்சி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இன்று காலை 11.30 மணிக்கு விக்ரம்-1 ராக்கெட் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்த நிலையில், வானிலை காரணமாக 35 நிமிடம் தாமதமாக பகல் 12.05க்கு விண்ணில் ஏவப்பட்டது.

பிரதமர் மோடி வாழ்த்து
இந்த ராக்கெட் ஏவப்படுவதை மத்திய அறிவியல்-தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் நேரில் பார்வையிட்டார். ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதை அடுத்து, இந்த திட்டத்தில் தொடர்புடைய விஞ்ஞானிகளுக்கு அவர் வாழ்த்துகளைத் தெரிவித்தார். ஐதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனமான ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ தயாரித்துள்ள இந்த ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.

முதன்முறையாக...
இந்திய தனியார் நிறுவனம், சொந்தமாக உருவாக்கிய ஏவுதளத்தை பயன்படுத்தி செயற்கைக்கோளை விண்வெளி சுற்றுப்பாதையில் நிலை நிறுத்த முயற்சிப்பது இதுவே முதன்முறை. இந்த பயணத்தின் நோக்கம், செயற்கைக்கோளை மட்டும் விண்ணில் செலுத்துவதல்ல. ராக்கெட்டின் அனைத்து நிலைகளும் விண்வெளி பயணத்தின் போது எவ்வாறு செயல்படுகின்றன? என்பதை நேரடியாக மதிப்பீடு செய்து தரவுகளை சேகரிப்பதே பிரதான இலக்காகும்.

350 கிலோ வரை எடை கொண்ட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான செயற்கைக்கோள்களை 450 கிலோ மீட்டர் தூரத்தில் பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தும் வகையில் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ என்ற தனியார் நிறுவனம் தயாரித்து உள்ள இந்த பயணத்துக்கு ‘மிஷன் ஆகமன்’ என்று பெயரிடப்பட்டு உள்ளது.