news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news மிகப்பெரிய பேராபத்து என தங்கம் தென்னரசு விளக்கம்
tv

Also Watch

tv

Read this

மிகப்பெரிய பேராபத்து என தங்கம் தென்னரசு விளக்கம்

மேகதாது விவகாரம்

4

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மேகதாது அணை விவகாரத்தில், புதிய நடுவர் மன்றம் அமைக்க திமுக கோரியதற்கான காரணம் குறித்து, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்து உள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இருந்து...
தமிழக சட்டப்பேரவையில் இருந்து வெளியே வந்து திமுக எம்எல்ஏவும் முன்னாள் நிதி அமைச்சருமான தங்கம் தென்னரசு கூறியதாவது;
மேகதாது அணை தொடர்பாக, புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று நாம் வலியுறுத்தி உள்ளோம். காவிரியில் மேகதாது அணை என்பது புதிய பிரச்சனை. இதற்கு புதிய நடுவர் மன்றம் அமைப்பதே சிறந்த முடிவு. இதனால் காவிரி நீர் தொடர்பாக, ஏற்கெனவே உச்சநீதிமன்றம் இறுதி செய்துள்ள தீர்ப்புக்கு எந்த பாதிப்பும் வராது.

பலத்தை காட்ட வேண்டும்
மேகதாது அணை விவகாரத்தில், மீண்டும் ஒரு விவாதத்தை உருவாக்குவது தேவையற்றது. தமிழ்நாட்டின் வாழ்வாதார உரிமையைப் பாதுகாக்க மீண்டும் ஒரு வீண் விவாதத்தை உருவாக்காமல், இந்த விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரண்டு நின்று, தமிழகத்தின் பலத்தை நாம் காட்ட வேண்டும். இந்த கோரிக்கை, தமிழ்நாடு மக்களின் நலனையும், காவிரி உரிமையையும் காக்கும் முடிவு தான் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

புதிய நடுவர் நீதிமன்றம் தேவை
இது எதுவுமே திமுகவின் முடிவு அல்ல, தமிழக அரசின் முடிவே. ஏனென்றால் மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க புதிய நடுவர் மன்றம் தேவை என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். மேகதாது அணை கட்டக்கூடாது என்று, தமிழக சட்டசபையில் பலமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டின் தரப்பு நியாயங்களை ஒன்றியத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பிரதமர், மத்திய அமைச்சர்களிடம் எடுத்து கூறி வருகிறோம். அதே நேரம் கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ் என எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மேகதாது அணையை கட்டுவோம் என அடாவடியாக கூறி வருகின்றனர். கர்நாடக அரசின் செயல் தமிழக விவசாயிகளுக்கு பேராபத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிறந்த தீர்வு
ஆகவே, இந்த விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைப்பதே சிறந்த மற்றும் ஆக்கப்பூர்வமான முடிவாக இருக்கும். இதனால் காவிரி நதிநீர் பங்கீட்டில் எந்த பிரச்சினையும் வராது. மீண்டும் சொல்கிறோம், மேகதாது அணை பிரச்சினையில் புதிய நடுவர் மன்றம் அமைப்பதே சிறந்தது. மேகதாது அணை விவகாரம் என்பது காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பிற்குப் பிறகு உருவான ஒரு புதிய சட்டச் சிக்கல். எனவே, 1956ஆம் ஆண்டின் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் தாவா சட்டத்தின்படி Inter-State River Water Disputes Act, 1956, இதற்கு தனியாக ஒரு நடுவர் மன்றம் அமைப்பதே சிறந்த தீர்வு.
இவ்வாறு தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

Related Link
அண்ணன் ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது என உதயநிதி பேச்சு

அண்ணன் ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது என உதயநிதி பேச்சு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நடிகர் யாஷின் ”டாக்சிக்” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

0
19 mins agoshare
Toxic








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau