Also Watch
Read this

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து, தொடரில் இருந்து வெளியேறினர்.

தொடரில் இருந்தும் வெளியேறிய இந்திய ஜோடிகள்
இந்தியாவின் யூகி பாம்ப்ரி - நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடி, நெதர்லாந்தின் ஜீன் ஜுலியன் ரோஜர் - அமெரிக்காவின் தியோடர் வினிகர் ஜோடியிடம் வீழ்ந்தது. அதேபோல், இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி - பிரேசிலின் மெர்செலோ டெமோலைனர் ஜோடியும் முதல் சுற்றோடு வெளியேறியது. மேலும், இந்தியாவின் அனிருத் சந்திரசேகர் - ஜப்பானின் டகேரு யுசூகி ஜோடியும் முதல் சுற்றுடன் தொடரில் இருந்து வெளியேறியது.

சாம்பியன் பட்டம் வென்றவர் தோல்வி
விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2ஆவது சுற்றில் ரஷ்யாவின் முன்னணி வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரிவா அதிர்ச்சி தோல்வியடைந்தார். செக் குடியரசின் பார்பரா கிரெஜ்சிகோவா உடன் மோதிய அவர், முதல் செட்டை 6-க்கு 4 என வென்றார்.

இதன் பிறகு சுதாரித்துக் கொண்ட கிரெஜ்சிகோவா அதிரடியாக விளையாடி அடுத்த இரு செட்களையும் 7-க்கு 5, 6-க்கு 4 என்கிற செட் கணக்கில் வென்று 3ஆவது சுற்றுக்கு முன்னேறினார். இதனால், மிர்ரா ஆண்ட்ரீவா தொடரில் இருந்தும் வெளியேறினார். இவர், பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் பட்டம் பெற்றவர்.