Also Watch
Read this
By: Web Team

வேற்றுமையில் ஒற்றுமை காண்பது தான் இந்தியாவின் தேசிய மொழி என எம்பி குழு தலைவர் கனிமொழி கருணாநிதி கூறினார்.
ஸ்பெயினுக்கு அனைத்து கட்சி எம்பி குழுவை தலைமை தாங்கி அழைத்து சென்ற அவரிடம் இந்தியாவின் தேசிய மொழி என்ன என கேள்வி எழுப்பப்பட்டதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
மாட்ரிட்டில் இந்திய வம்சாவளியினரிடம் அவர் கலந்துரையாடிய போது அவர்களில் ஒருவர் இப்படி கேள்வி எழுப்பினார்.
இந்தியாவின் தேசிய மொழி என்பது வேற்றுமையில் ஒற்றுமை என பதிலளித்த அவர், இந்த செய்தியை எம்பி குழுவினர் உலகிற்கு தெரிவிப்பதாக கூறினார்.
இந்தியா ஒரு பாதுகாப்பான நாடு என மேலும் கூறிய அவர், காஷ்மீரும் இந்தியாவுக்குள் பாதுகாப்பாக இருக்கும் என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved