சோயிப் அக்தர் : சச்சின் விக்கெட்டை வீழ்த்துவதற்காக வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக்கொண்டதாக பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார். இந்திய சுற்றுப்பயணத்தின் போது சச்சினின் விக்கெட்டை வீழ்த்துவது தொடர்பாக தானும் சக வீரர் சக்லைன் முஷ்டாக்கும் செய்துகொண்ட ரகசிய பந்தயம் குறித்து அவர் பேசியுள்ளார். இருவரில் யார் சச்சினின் விக்கெட்டை எடுப்பது என தங்களுக்குள் போட்டி இருந்ததாக சோயப் அக்தர் கூறினார். அப்போது தங்கள் இருவரும் கடுமையான முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், யாருக்கும் தெரியாமல் வலி நிவாரணிகள் எடுத்துக்கொண்டு விளையாடியதாகவும் சோயிப் அக்தர் தெரிவித்தார். Related Link அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை தக்கவைத்த இந்திய அணி