Also Watch
Read this
By: Manigandan Raja

நாளை நள்ளிரவு முதல் காலிறுதி போட்டிகள் தொடக்கம் :
48 அணிகள் பங்கேற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 8 அணிகள் காலிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. பிரான்ஸ், மொராக்கோ, ஸ்பெயின், பெல்ஜியம், நார்வே, இங்கிலாந்து, அர்ஜெண்டினா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய அணிகள் காலிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளன.
10-ம் தேதி நள்ளிரவு அமெரிக்காவின் பாஸ்டன் மைதானத்தில் நடைபெறும் முதல் காலிறுதி போட்டியில் பிரான்ஸ் மற்றும் மொராக்கோ அணிகள் மோதுகின்றன. லாஸ் ஏஞ்சல்ஸ் மைதானத்தில் 11-ம் தேதி நள்ளிரவு நடைபெறும் போட்டியில் ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று சாதனை :

23 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை மேற்கிந்தியத் தீவுகள் அணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 217 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றிருந்தது.
தொடர்ந்து நடைபெற்ற 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சமனில் முடிவடைந்தது. இதனால், 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-க்கு 0 என்ற கணக்கில் மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை வென்றது. இதற்கு முன்பு மேற்கிந்திய தீவுகள் அணி 2003 பிப்ரவரியில் டெஸ்ட் தொடர் வெற்றியை பதிவு செய்திருந்தது.