Also Watch
Read this
By: Web Team

உலகளாவிய அளவில் சுமார்12 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக பிரபல ஐடி நிறுவனமான TCS அறிவித்த தன் எதிரொலியாக அதன் பங்குகள் இன்று இரண்டு சதவிகிதம் விலை சரிந்தன.
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான TCS தனது ஊழியர்களில் 2 சதவிகிதம் பேரை விரைவில் பணிநீக்கம் செய்வதாக அறிவித்து, மத்திய மற்றும் முதுநிலை பணியாளர்கள் நீக்கம் செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளது.
ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி TCS ல் ஆறு லட்சத்து 13 ஆயிரத்து 69 ஊழியர்கள் உள்ளனர். சமீபத்தில் புதிதாக ஐந்தாயிரம் பேரை வேலைக்கு எடுத்தாலும், வருங்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் மாற்றங்களை செய்வதற்காக இப்போது ஆட்குறைப்பு நடவடிக்கைகளை இந்த நிறுவனம் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved