Also Watch
Read this
By: Manigandan Raja

ஹோட்டலில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் பெண் பலி :
டொமினிகன் நாட்டின் கடற்கரை சுற்றுலாத் தலமான பயாஹிபேயில் ((Bayahibe)) உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் இத்தாலியப் பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த தீ விபத்து சம்பவத்தை தொடர்ந்து சுமார் 1,700 சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.
கார்கிவ் நகரில் ரஷ்யா வான்வழித் தாக்குதல் :

உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் 9 பொதுமக்கள் காயமடைந்தனர். குடியிருப்பு கட்டடம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் சிக்கியிருந்த மக்களை மீட்க மீட்புக் குழுவினர் பல மணிநேரம் போராடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் :
பாகிஸ்தானில் நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர். பக்துன்க்வா மாகாணத்தில் சாலையில் பயணிகளுடன் சென்ற வாகனம் மீது வெடிகுண்டு வீசப்பட்டதில் 5 பேர் உயிரிழந்தனர்.
இதனைத்தொடர்ந்து, அடுத்த சில மணி நேரங்களில் அங்கு மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதில் மேலும் இருவர் கொல்லப்பட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved