Also Watch
Read this
By: Web Team

மியான்மரில் வியாழக்கிழமை காலை மீண்டும் 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் அச்சமடைந்தனர்.
இந்த நிலநடுக்கம் காலை 11.03 மணியளவில் பூமிக்கு அடியில் 120 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக காலை 9.52 மணியளவில் பூமிக்கு அடியில் 70 கிலோ மீட்டர் ஆழத்தில் 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. புதன்கிழமை 10 கிலோ மீட்டர் ஆழத்திலேயே 3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
குறைவான ஆழத்தில் ஏற்படும் நிலநடுக்கங்களின் அலைகள் குறைந்த நேரத்தில் மேற்பரப்புக்கு பயணித்து வலுவான அதிர்வுகளை ஏற்படுத்தக் கூடியவை என்பதால், ஆழமான நிலநடுக்கங்களை விட ஆபத்தானவை என கூறப்படுகிறது.