Also Watch
Read this
By: Manigandan Raja

ஒரு மாலுமி பலி ஈரானுக்கு இந்தியா கடும் கண்டனம்
ஹோர்மூஸ் நீரிணை அமைந்துள்ள ஓமன் கடற்பகுதியில் சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்த நிலையில், ஈரானுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் ஈரானுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கட்டண வசூல் கிடையாது - டிரம்ப் அறிவிப்பு

ஹோா்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு 20 சதவிகித கட்டணம் வசூல் செய்யவிருந்த முடிவை திரும்பப் பெறுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்கு பதிலாக வளைகுடா நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளப் போவதாகவும் கூறியுள்ளார்.
ஈரான் தவிர மற்ற அனைத்து நாடுகளின் கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணை வழியாக செல்ல அனுமதி எனவும் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved