Also Watch
Read this
By: Web Team

அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள் அழிக்கப்படவில்லை என்ற உளவுத் துறை தகவல்களை அதிபர் டிரம்ப் வன்மையாக மறுத்துள்ளார்.
அமெரிக்கா நடத்திய தாக்குதலால் ஈரானின் அணுசக்தி திட்டங்களின்செயல்பாடு சில மாதங்கள் மட்டுமே முடங்கும் என அமெரிக்க ராணுவ உளவு முகமையை குறிப்பிட்டு, CNN மற்றும் நியூ யார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.
தாக்குதலுக்கு முன்பாகவே ஈரானின் யுரேனியம் பெருமளவு செறிவூட்டப்பட்டு விட்டதாகவும் இந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கு தமது டுரூத் சமூக வலைதள பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், CNN, நியூ யார்க் டைம்ஸ் ஆகியன பொய்ச் செய்திகளை வெளியிட்டதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : மைக்ரோசாப்ட் நிறுவனம் மீண்டும் ஆட்குறைப்பு நடவடிக்கை..
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved