Also Watch
Read this
By: Manigandan Raja

1.எகிப்து அதிபர் அப்தெல் ஃபட்டா எல்-சிசி திட்டவட்டம் :
பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வரும் வரை இஸ்ரேலுடன் சுமூக உறவு ஏற்படாது என எகிப்து அதிபர் அப்தெல் ஃபட்டா எல்-சிசி ((Abdel Fattah el-Sisi ))திட்டவட்டமாக கூறினார்.
பாலஸ்தீனத்தில் ஆக்கிரமிப்பை மீட்டு, அங்குள்ள அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பை வழங்காமல் இயல்பு நிலையை மீட்டெடுக்க முடியாது எனவும் அவர் கருத்து தெரிவித்தார். அதேபோன்று அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வரும் விவகாரத்தில் ஆதரவளிக்குமாறும் இஸ்ரேலுக்கு எகிப்து அழைப்பு விடுத்துள்ளது.
2.ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான ராணுவ நடவடிக்கை தொடரும் :

லெபானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் தொடரும் என இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது.
தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவம் தனது படைகளை நிறுத்தியுள்ள நிலையில், லெபனானில் இருந்து பயங்கரவாத அமைப்பை வெளியேற்றும் வரை தொடர்ந்து போராடுவோம் என்றும், போர் ஒப்பந்தம் மீறப்பட்டால் தாக்குதல் தொடரும் எனவும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மக்களுக்கு எந்த அச்சுறுத்தல் கொடுத்தாலும் உடனடியாக பதிலடி கிடைக்கும் எனவும் இஸ்ரேல் எச்சரித்துள்ளது.