Also Watch
Read this
By: Web Team

இந்திய மீது அமெரிக்க வரி விதித்துள்ள சூழ்நிலையில், சர்வதேச அரசியல் அல்லது பாதுகாப்பு மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், இந்தியா, சீனா போன்ற பெரிய நாடுகள், தனித்துவமான அரசியல் அமைப்புகள் மற்றும் உள்நாட்டு சட்டங்களை கொண்டுள்ளதாகவும், அவர்களை தண்டிக்க முயலும் தலைவர்கள் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்வார்கள் என்றும் கூறியுள்ளார்.
மேலும் வரலாற்றில் நாடுகள் இறையாண்மை மீதான தாக்குதல்களை நீண்ட காலம் சந்தித்துள்ளதாகவும், தற்போது காலனித்துவ சகாப்தம் முடிந்துவிட்டது. தங்கள் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு இனி யாரும் ஆதிக்க தொனியில் பேச முடியாது என்றும் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved