Also Watch
Read this
By: Web Team

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே பணம் வைத்து சூதாடிய 16 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 8 லட்சத்து 58ஆயிரம் ரூபாய் பணம், மதுபாக்கெட்டுகள், குட்கா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கொத்தக்கொண்டப்பள்ளியில் பணம் வைத்து ஒரு கும்பல் சூதாடி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்தனர். இதில் பெங்களூரை சேர்ந்த 10பேர், ஒசூரை சேர்ந்த 6பேர் என மொத்தம் 16பேரை கைது செய்தனர். மேலும் 4இருசக்கர வாகனங்கள், 18செல்ஃபோன்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved