Also Watch
Read this
By: Manigandan Raja

பக்கத்துவீட்டு சண்டை :
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு பகுதியைச் சேர்ந்த சுமன் என்பவர் வசித்து வருகிறார். அவர் வீட்டின் அருகே மலர் என்பவர் வசித்து வந்த
நிலையில் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்படுவது வழக்கமாக வந்துள்ளது.
இன்று அதே போல் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு வந்த நிலையில், சுமன் மலரை அடித்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த பச்சையப்பன் மகன் மாது என்பவர் பிரச்சனையை தடுத்துள்ளார். அப்போது மாதுக்கும், சுமனுக்கும் பிரச்சனை தொடரவே, அந்த இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இதில் சுமன்,பிரச்சனையை தடுக்க வந்ந மாது மற்றும் அவருடைய அப்பா பச்சியப்பன் ஆகிய இருவரையும் இரும்பு ராடால் அடித்ததில் இருவருக்கும் தலையில் பலத்த காயம்
ஏற்பட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஊத்தங்கரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மலரை தகாத வார்த்தையில் திட்டியும் அவரை அடிக்கும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved