news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சிவகாசி அருகே 40 நாட்களாக நிறுத்தியிருந்த காரில் திடீர் தீ
tv

Also Watch

tv

Read this

சிவகாசி அருகே 40 நாட்களாக நிறுத்தியிருந்த காரில் திடீர் தீ

சிவகாசி, விருதுநகர்

18

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sivakasi fire

நிறுத்தியிருந்த காரில் திடீர் தீ :

சிவகாசி பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தம் அருகே மாரிச்செல்வம் என்பவருக்கு சொந்தமான ஆம்னி காரை கடந்த 40 நாட்களாக நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் மீண்டும் இன்று காரை இயக்க முயற்சித்தபோது திடீரென கார் தீப்பற்றியுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து தீயணைப்பான் கருவியை எடுத்து வந்து தீயை அணைக்க முயற்சித்துள்ளார் ஆனாலும் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் சிவகாசி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்து தொடர்பாக சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் திடீரென கார் பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Link
நியூஸ் தமிழ் எதிரொலியால் தனியார் காவலாளிகள் மீது நடவடிக்கை

நியூஸ் தமிழ் எதிரொலியால் தனியார் காவலாளிகள் மீது நடவடிக்கை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
3 hrs 45 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved